உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திமிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-19 17:37 IST   |   Update On 2021-12-19 17:37:00 IST
திமிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆயிரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48), தொழிலாளி. இவரது மனைவி லலிதா. நேற்று முன்தினம் இரவு பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் லலிதா கோபித்துக்கொண்டு பக்கத்து கிராமமான சீயாம்பாடி கிராமத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணி அளவில் எழுந்து பார்க்கும் போது பழனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News