உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டத்தில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
வேளாண்மை ஊரக சிவகங்கை மண்டலத்தில் 92 பேரிடம் இருந்து ரூ. 292.08 லட்சம் (அசல் மற்றும் வட்டியுடன்) 31.3.2014-ந் தேதியன்று நிலுவையில் இருந்து தவணை தவறிய கடனாக உள்ளது .
சிவகங்கை:
சிவகங்கை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மண்டலத்தில் செயல்பட்டு வரும் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலுவையில் இருந்து தவணை தவறிய பண்ணைசாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தின் செயலாக்க காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் செலுத்தியுள்ள கடன்தாரர்கள் மீதமுள்ள 75சதவீத தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும், இந்த திட்டத்தில் இதுவரை சேர்ந்திராத கடன்தாரர்களும் இந்தகால நீட்டிப்பை பயன்படுத்தி, இந்த திட்டத்தில் தவணையில் முழுமையாக கடனைத் திருப்பிச் செலுத்த சேர்ந்து ஒரே வாய்ப்பளிக்கும் வகையிலும், 31.3.2014 தேதியின்படி தொடக்க கூட்டுறவு மற்றும் வங்கிகளில் வளர்ச்சி நீண்ட காலமாக நிலுவையிலுள்ள அனைத்து தவணை தவறிய பண்ணை சாரா கடன்களையும் முழுமையாக தீர்வு செய்யும் வகையில், ஒருமுறை கடன் தீர்வு திட்டம் 2014-ஐ 1.1.2021 முதல் 31.12.2021 வரை காலநீட்டிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
வேளாண்மை ஊரக சிவகங்கை மண்டலத்தில் 92 பேரிடம் இருந்து ரூ. 292.08 லட்சம் (அசல் மற்றும் வட்டியுடன்) 31.3.2014-ந் தேதியன்று நிலுவையில் இருந்து தவணை தவறிய கடனாக உள்ளது .
எனவே தவணை தவறிய பண்ணைசாரா கடன்தாரர்கள் உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து, தொடர்புடைய தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மண்டலத்தில் செயல்பட்டு வரும் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலுவையில் இருந்து தவணை தவறிய பண்ணைசாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தின் செயலாக்க காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் செலுத்தியுள்ள கடன்தாரர்கள் மீதமுள்ள 75சதவீத தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும், இந்த திட்டத்தில் இதுவரை சேர்ந்திராத கடன்தாரர்களும் இந்தகால நீட்டிப்பை பயன்படுத்தி, இந்த திட்டத்தில் தவணையில் முழுமையாக கடனைத் திருப்பிச் செலுத்த சேர்ந்து ஒரே வாய்ப்பளிக்கும் வகையிலும், 31.3.2014 தேதியின்படி தொடக்க கூட்டுறவு மற்றும் வங்கிகளில் வளர்ச்சி நீண்ட காலமாக நிலுவையிலுள்ள அனைத்து தவணை தவறிய பண்ணை சாரா கடன்களையும் முழுமையாக தீர்வு செய்யும் வகையில், ஒருமுறை கடன் தீர்வு திட்டம் 2014-ஐ 1.1.2021 முதல் 31.12.2021 வரை காலநீட்டிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
வேளாண்மை ஊரக சிவகங்கை மண்டலத்தில் 92 பேரிடம் இருந்து ரூ. 292.08 லட்சம் (அசல் மற்றும் வட்டியுடன்) 31.3.2014-ந் தேதியன்று நிலுவையில் இருந்து தவணை தவறிய கடனாக உள்ளது .
எனவே தவணை தவறிய பண்ணைசாரா கடன்தாரர்கள் உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து, தொடர்புடைய தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.