உள்ளூர் செய்திகள்
குடிநீர்

பெரம்பலூரில் குடிநீர் தொடர்பான புகார்களை போனில் தெரிவிக்கலாம்- ஆணையர் தகவல்

Published On 2021-12-17 16:24 IST   |   Update On 2021-12-17 16:24:00 IST
தற்போது வழங்கி வரும் குடிநீர் விநியோக கால அவகாச இடைவெளியை குறைத்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிடும் வகையில் பெரம்பலூர் நகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கும் முக்கிய ஆதாரமான கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது வழங்கி வரும் குடிநீர் விநியோக கால அவகாச இடைவெளியை குறைத்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிடும் வகையில் பெரம்பலூர் நகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த பரிசோதனை பணிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் இவ்வலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04328 225 285-ல் மற்றும் நகராட்சி ஆணையர் கைபேசிஎண் 7397389959 மற்றும் நகராட்சி பொறியாளர் கைபேசி எண் 7397389958 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அறிவிக்கப்படுகிறது.

இத்தகவலை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News