உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

Published On 2021-12-15 13:11 GMT   |   Update On 2021-12-15 13:11 GMT
கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 42). வெல்டர்.

இவர் மேல கபிஸ்தலம் மெயின் ரோட்டில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று பட்டறையில் வேலை பார்த்தபோது திடீரென ஏற்பட்ட மின்கசிவால் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து அதே இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் போலீசார் முருகானந்தத்தின் உடலைமருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News