உள்ளூர் செய்திகள்
தற்கொலை

நெமிலி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-15 10:53 GMT   |   Update On 2021-12-15 10:53 GMT
நெமிலி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை டெம்பிள் சிட்டி பகுதியில் உள்ள நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது மாமியார் ஊரான சயனாபுரம் சுடுகாட்டின் சுற்றுச் சுவர் அருகே, தான் அணிந்திருந்த வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி யசோதா நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News