உள்ளூர் செய்திகள்
பாம்பு

கறம்பக்குடி அருகே பாம்பு கடித்து முதியவர் பலி

Published On 2021-12-15 15:26 IST   |   Update On 2021-12-15 15:26:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பாம்பு கடித்து முதியவர் பலியானார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புதுவிடுதி ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 67). இவர் தனது வயலில் வேலை பார்த்தார். அப்போது அவரை வி‌ஷபாம்பு கடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருப்பையாவின் மனைவி செல்லம்மாள் ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News