உள்ளூர் செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2021-12-14 17:02 IST   |   Update On 2021-12-14 17:02:00 IST
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தேவூர் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பிரபு (வயது 33) என்பதும். இவர் சாராயம் விற்றதும் தெரிய வந்ததது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதே போல காக்கழனி தோப்பு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் ( 27), ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணதாசன் (52), கீழகாவலக்குடி காளவாய்கரை பகுதியில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம், தென்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அமிர்தம் (54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News