உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

Published On 2021-12-12 16:27 IST   |   Update On 2021-12-12 16:27:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,538 பேர் உயிரிழந்துள்ளனர். 602 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News