உள்ளூர் செய்திகள்
திருட்டு

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-12-12 15:29 IST   |   Update On 2021-12-12 15:29:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த துரைமுருகன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News