உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

கூடலூர் அருகே தார் கலவை எந்திரம் செயல்பட அனுமதிக்கக் கூடாது- டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

Published On 2021-12-12 08:44 GMT   |   Update On 2021-12-12 08:44 GMT
கூடலூர் அருகே தார் கலவை எந்திரம் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதுடன், அந்த இடத்தில் மீண்டும் தார் கலவை எந்திரம் செயல்படாது என்ற உறுதியையும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... பொதுமக்கள் தடுப்பூசி சான்றிதழுடன் நடமாடவேண்டும்- கவர்னர் அதிரடி அறிவிப்பு

Tags:    

Similar News