உள்ளூர் செய்திகள்
கைது

ஆற்காட்டில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-12-11 16:11 IST   |   Update On 2021-12-11 16:11:00 IST
ஆற்காட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு பகுதியில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு முட்புதரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு புரணாக பதில் கூறவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு அர்ச்சனா நகர் பகுதியைச் சேர்ந்த எலி என்ற சதீஷ் (வயது 26), என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News