உள்ளூர் செய்திகள்
நாமக்கல் அருகே பெண் என்ஜினீயர் தற்கொலை
நாமக்கல் அருகே பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தையை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 23). என்ஜினீயரான இவர் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த அவரது பெற்றோர் பிரியதர்ஷினியை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.