உள்ளூர் செய்திகள்
மகாகவி பாரதியாருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் - ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’
தமிழுக்குத் தொண்டு செய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அரசு சார்பில் சென்னையிலும் எட்டையபுரத்திலும் விழாக்கள் நடத்தப்பட்டன.
பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது-
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
திறம்பாட வந்த மறவன்!
அறம்பாட வந்த அறிஞன்!
படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று!
தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்த 11 பதக்கங்களை பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்த வீராங்கனை