உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் தபால்துறை குறைகேட்பு கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-11 06:02 GMT   |   Update On 2021-12-11 06:22 GMT
காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால்துறை குறைகேட்பு கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் தபால் சேவை சம்பந்தமான புகார் யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் மாலை 4 மணிக்கு பங்கேற்கலாம். 

இல்லையேல் ‘தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம் - 641 601’ என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும், 13-ந்தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பலாம். கடிதம் மேல், ‘ஞிகிரி கிஞிகிலிகிஜி சிகிஷிணி’ என, குறிப்பிடுவது அவசியம். 

காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News