உள்ளூர் செய்திகள்
கைது

நாகையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2021-12-10 15:48 IST   |   Update On 2021-12-10 15:48:00 IST
நாகையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரீகன் (வயது36) என்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

இதேபோல, ரெயிலடி தெருவில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பரமன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News