உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தோட்டக்கலை பயிர் சாகுபடியில் அடர்நடவு முறையை பின்பற்றினால் கூடுதல் வருவாய் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

Published On 2021-12-10 13:14 IST   |   Update On 2021-12-10 13:14:00 IST
ஒரு வாழை நடும் இடத்தில்3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மேற்குபதி கிராமத்தில் தோட்டக்கலை பயிர்கள் அடர் நடவு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் வேளாண் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர். 

தொழில்நுட்ப வல்லுனர் பச்சியப்பன் பேசுகையில்:

‘மா, வாழை பயிர்களை  அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதன் மூலமாக 3 மடங்கு கூடுதல் வருவாய் பெறலாம். வழக்கமாக ஒரு வாழை நடும் இடத்தில் 3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

Similar News