உள்ளூர் செய்திகள்
கால்நடை மருத்துவ பெண் உதவியாளர்

நாகையில் குளத்தில் பிணமாக கிடந்த கால்நடை மருத்துவ பெண் உதவியாளர்

Published On 2021-12-08 16:44 IST   |   Update On 2021-12-08 16:44:00 IST
நாகையில் குளத்தில் கால்நடை மருத்துவ பெண் உதவியாளர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:

நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி(வயது 47). இவர், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் உமாமகேஸ்வரி, வெளிப்பாளையம் சிவன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கும், வெளிப்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகையில், கால்நடை மருத்துவ பெண் உதவியாளர், குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News