உள்ளூர் செய்திகள்
விபத்து

கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-12-08 15:36 IST   |   Update On 2021-12-08 15:36:00 IST
கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சேக்முகமது ( வயது 35). இவர் சம்பவத்தன்று இரவு புதுக்கோட்டையில் இருந்த ஆலங்குடி வழியாக கறம்பக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மரவம்பட்டி என்ற இடத்தில் வரும்போது திடீரென நாய் சாலையின் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய சேக்முகமது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பகுடிபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேக் முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News