உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

பொறையாறு அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-12-07 15:43 IST   |   Update On 2021-12-07 15:43:00 IST
பொறையாறு அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரங்கம்பாடி:

பொறையாறு அருகே திருக்கடையூர் திருமெய்ஞானம் வடக்கு தெருவைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவருடைய நாய் அதே தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கடித்து விட்டதாக கூறி இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மணிகண்டன் (வயது 21), காமராஜ், சதீஷ், தினேஷ், சசிகுமார் ஆகியோர் சேர்ந்து நம்பிராஜன், அவருடைய மனைவி கவிதா, சகோதரர் கணேசன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நம்பிராஜன் குடும்பத்தார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொறையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப்பதிவு செய்து. மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

Similar News