உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-12-07 10:01 GMT   |   Update On 2021-12-07 10:01 GMT
அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

சோளிங்கரை அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 73). அரக்கோணம் அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தனது பேரனுக்கு நேற்று மதியம் கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டு, கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அருணகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News