உள்ளூர் செய்திகள்
விபத்து

காஞ்சிபுரம் அருகே தனியார் பஸ்-லாரி மோதல்: 15 பேர் படுகாயம்

Published On 2021-12-07 08:50 GMT   |   Update On 2021-12-07 08:50 GMT
காஞ்சிபுரம் அருகே தனியார் பஸ்-லாரி மோதிய விபத்தில் ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்தித்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று இரவு பணி முடிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் புறப்பட்டு சென்றது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது.

அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கம்பெனி பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருந்த ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News