உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவ நேரி மீனவர் பகுதியை சேர்ந்தர் பரதன் (வயது32). இவர் மோட்டர் சைக்கிளில் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய பரதன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.