உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 54 பேர் பாதிப்பு

Published On 2021-12-05 10:40 GMT   |   Update On 2021-12-05 10:40 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,534 பேர் உயிரிழந்துள்ளனர். 632 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 213 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News