உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் செங்கப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து செங்கப்பட்டியை சேர்ந்த பெட்டிக்கடைகாரர் சொக்கலிங்கம் (வயது 59), பெரியசெங்கப்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு (75) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் நடத்திய சோதனையில் இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (42), மலைக்குடிப்பட்டியை சேர்ந்த மதார் (65) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.