உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Published On 2021-12-05 06:28 GMT   |   Update On 2021-12-05 06:59 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News