உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மொபட்- ஆட்டோ மோதல்: தொழிலாளி பலி

Published On 2021-12-04 11:12 GMT   |   Update On 2021-12-04 11:12 GMT
சிங்கப்பெருமாள் கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் மொபட்டில் செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சேட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News