உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே பெண் தற்கொலை

Published On 2021-12-04 09:52 GMT   |   Update On 2021-12-04 09:52 GMT
கந்தர்வகோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அருகே உள்ள மல்லிகை நத்தம் கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மனைவி இந்திரா (வயது 40). இவர் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா நேற்று முன்தினம் இரவு விஷத்தை தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனியாண்டி அளித்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News