உள்ளூர் செய்திகள்
நீலிகணபதிபாளையம் கருடபெருமாள் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மங்கலம்
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-நீலிகணபதி பாளையம் பகுதியில் ஸ்ரீ தேவி, ஸ்ரீபூதேவி, சமேத ஸ்ரீ கருடபெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் மலர் அலங்காரத்தில் கருட பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு பூஜையில் நீலிகணபதிபாளையம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிபாளையம், வி.ஐ.பி.நகர், வெங்கடேஷ்வரா நகர், ஜீவா நகர், மீனாட்சி நகர், உள்ளிட்ட மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.