உள்ளூர் செய்திகள்
கைது

காஞ்சிபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது- 43 பவுன் நகை மீட்பு

Published On 2021-12-01 09:32 GMT   |   Update On 2021-12-01 09:32 GMT
காஞ்சிபுரத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 43 பவுன் நகையை மீட்டனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்து 43 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜாராம், கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த திலிப் திவாகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை மீட்கப்பட்டது.

Tags:    

Similar News