செய்திகள்
கைது

அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 6 பேர் கைது

Published On 2021-11-30 12:23 GMT   |   Update On 2021-11-30 12:23 GMT
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி போலீசார் நேற்று ரெத்தினக்கோட்டை ரெயில்வே கேட், தினசரி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பழனிமுருகன் (வயது 24), சேக்தாவூத் (54), சிவஞானம் (40), அய்யாசாமி (41), மணிமாறன் (41) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதேபோல, அறந்தாங்கி பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக கவிபாரதி (20) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News