செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-11-30 06:00 GMT   |   Update On 2021-11-30 06:00 GMT
கோவை மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 373 பேர் குணமடைந்துள்ளனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 463 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 1,234 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News