செய்திகள்
கைது

கோவையில் 38 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்ற பெண் கைது

Published On 2021-11-28 10:07 GMT   |   Update On 2021-11-28 10:07 GMT
கோவையில் 38 கிலோ குட்காவை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை பி.என்.புதூர் அடுத்த கட்டபொம்மன்தெரு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி மற்றும் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். 

அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவரது மனைவி லட்சுமி (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 38 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News