செய்திகள்
நாகமலை புதுக்கோட்டையில் வீடு புகுந்து 9 பவுன் நகை கொள்ளை
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வீடு புகுந்து 9 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் இளையராஜா (வயது 46). இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை பார்த்துக் கொள்வதற்காக சந்தோஷ் இளையராஜா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி, மகன் மட்டும் வீட்டில் இருந்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் வீட்டின் படுக்கை அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் பின்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் நைசாக பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் வளையல், ஒரு பவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
மறுநாள் நகைகள் திருடு போயிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சந்தோஷ் இளையராஜா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் இளையராஜா (வயது 46). இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை பார்த்துக் கொள்வதற்காக சந்தோஷ் இளையராஜா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி, மகன் மட்டும் வீட்டில் இருந்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் வீட்டின் படுக்கை அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் பின்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் நைசாக பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் வளையல், ஒரு பவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
மறுநாள் நகைகள் திருடு போயிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சந்தோஷ் இளையராஜா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.