செய்திகள்
வாக்காளர் பட்டியல்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Published On 2021-11-27 10:56 GMT   |   Update On 2021-11-27 10:56 GMT
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தென்காசி:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022 ஆம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News