செய்திகள்
வழக்கு பதிவு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 7 பேர் மீது வழக்கு

Published On 2021-11-27 10:48 GMT   |   Update On 2021-11-27 10:48 GMT
ஆண்டிபட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சருத்து பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பெரியதுரை. (வயது 28). இவருக்கும் உத்தம பாளையம் சிங்காரத் தோப்பு தெருவைச் சேர்ந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு கன்னியப்பபிள்ளைபட்டி அருகே உள்ள கோபால்சாமி கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். 6 மாத குறை பிரசவத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையும் சிறுமியும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியதுரை மற்றும் உறவினர்கள் கண்ணன், கீதா, வித்யா, திருக்குமரன், மரகதம், லதா ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெரிய துரையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News