செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடைமழையிலும் ஆவின் பால் தடையின்றி வினியோகம்
மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலும் 13 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வினியோகிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் ஆவின் பால் வினியோகம் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பால் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டால் உடனடியாக செயல்பட சிறப்புப் படை அமைக்கப்பட்டு மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய ஆவின் பால் பண்ணைகளில் இருந்து சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
விருகம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகம் தங்கி நின்றதால் ஆவின் பால் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் மாற்று வழியாக பால் வினியோகிக்கப்பட்டதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் மேடான பகுதிகளில் ஆவின் பால் வினியோகிக்கப்பட்டது.
கனமழையால் பால் வினியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 2 மணி நேரம் முன்னதாகவே பால் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை 137 வாகனங்களில், 180 டீலர்கள் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கு தடையின்றி, எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆவின் பால் வினியோகம் நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலும் 13 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கப்பட்டுள்ளது. பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கினாலோ அல்லது பழுதடைந்தாலோ உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கொள்ள உதவி பொது மேலாளர்கள் 3 பேருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் ஆவின் பால் வினியோகம் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பால் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டால் உடனடியாக செயல்பட சிறப்புப் படை அமைக்கப்பட்டு மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய ஆவின் பால் பண்ணைகளில் இருந்து சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
விருகம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகம் தங்கி நின்றதால் ஆவின் பால் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் மாற்று வழியாக பால் வினியோகிக்கப்பட்டதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் மேடான பகுதிகளில் ஆவின் பால் வினியோகிக்கப்பட்டது.
கனமழையால் பால் வினியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 2 மணி நேரம் முன்னதாகவே பால் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை 137 வாகனங்களில், 180 டீலர்கள் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கு தடையின்றி, எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆவின் பால் வினியோகம் நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலும் 13 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கப்பட்டுள்ளது. பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கினாலோ அல்லது பழுதடைந்தாலோ உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கொள்ள உதவி பொது மேலாளர்கள் 3 பேருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் தண்ணீர் தேங்கிய 75 பகுதிகளில் இருந்து வெறியேற்றும் பணி தீவிரம்- மாநகராட்சி நடவடிக்கை