செய்திகள்
திருட்டு

போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகள் திருட்டு

Published On 2021-11-27 06:06 GMT   |   Update On 2021-11-27 06:06 GMT
போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழ் செவல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வரமடம் சிவன் கோவில் அருகில் நின்ற டாரஸ் லாரியை தான் சோதனை செய்தேன். அதில் 50 கிலோ எடை கொண்ட 49 சிமெண்டு மூட்டைகளும், டிரைவரும் மாயமாகி விட்டனர். மேலும் லாரியின் டிரைவர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News