செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி முள்ளுகாடு பகுதியில் சாராயம் விற்றதாக அதே ஊரை சேர்ந்த கண்ணன்(வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.