செய்திகள்
போராட்டம்

ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2021-11-26 16:40 IST   |   Update On 2021-11-26 16:40:00 IST
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஏபி ஸ்டாப் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி, எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், இஜிடியூ.ஐஎன்டியூசி துணை தலைவர் மோகன் குமார் ஆகியோர் மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் வழங்காமலும், பெல் நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் வளர்ச்சி குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்க ஜே.சி.எம் ஐ உடனடியாக கூட்ட வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News