செய்திகள்
விபத்து

நெல்லை அருகே மழையால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து- வாலிபர் பலி

Published On 2021-11-26 10:10 GMT   |   Update On 2021-11-26 10:10 GMT
நெல்லை அருகே மழையால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை:

தாழையூத்து காமராஜர் நகரை சேர்ந்தவர் புதியவன் செல்வன் (வயது 28). தொழிலாளி. நேற்று மாலை இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேலப்பாட்டம் அருகே சென்றபோது பலத்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News