செய்திகள்
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவிநாசி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. அவிநாசி கூட்டுறவு சங்கங்களில் நிலவி வரும் உர தட்டுப்பாட்டால் விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
இதனால் வெளிச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய நிர்வாகிகள் முத்துரத்தினம், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.