செய்திகள்
கோப்புபடம்

கரடிவாவி நூலகருக்கு விருது

Published On 2021-11-26 07:24 GMT   |   Update On 2021-11-26 07:24 GMT
விருது பெற்ற தனபாக்கியம் 99 புரவலர்கள், மற்றும் 700க்கும் அதிகமான வாசகர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:

தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறந்த நூலகருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக விருதுகள் வழங்குவது தள்ளிப்போனது. இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 33 நூலகர்கள் விருதுக்கு தேர்வாகினர்.

திருப்பூர் மாவட்ட அளவில் பல்லடம் அடுத்த கரடிவாவியை சேர்ந்த தனபாக்கியம் சிறந்த கிளை நூலகராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்.

விருது பெற்ற தனபாக்கியம்  99 புரவலர்கள், மற்றும் 700க்கும் அதிகமான வாசகர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற நூலகரை பலரும் பாராட்டினர். 
Tags:    

Similar News