செய்திகள்
பெட்ரோல் பங்க்கில் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது
ஆற்காடு அருகே பெட்ரோல் பங்க்கில் தகராறு செய்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.