செய்திகள்
கோப்புபடம்

திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் நியமனம்

Published On 2021-11-23 06:50 GMT   |   Update On 2021-11-23 06:50 GMT
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர்:

பேரூராட்சியாக இருந்த திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாற்றப்பட்டது. இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சியின் கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி கமிஷனராக இருந்த முத்துக்குமார் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News