செய்திகள்
யானை

கல்லட்டி மலைப்பாதையில் காட்டுயானை நடமாட்டம்

Published On 2021-11-22 12:00 GMT   |   Update On 2021-11-22 12:00 GMT
காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
ஊட்டி:

ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் காட்டுயானை ஒன்று நடமாடியது. சாலையோரம் நின்றபடி மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் முன்பாகவே வாகனங்களை நிறுத்தினர். ஒரு மணி நேரம் அங்கேயே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
Tags:    

Similar News