செய்திகள்
திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் நல்லடக்கம்
ஆடு திருடர்களால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படட்து. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான சோழமாநகருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் சோழமாநகர் இடுகாட்டில் பூமிநாதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.