செய்திகள்
பருவமழை

சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Published On 2021-11-18 18:20 GMT   |   Update On 2021-11-18 18:20 GMT
கனமழையை தொடர்ந்து தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கிறது.

மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News