செய்திகள்
மாயம்

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயம்

Published On 2021-11-18 11:03 GMT   |   Update On 2021-11-18 11:03 GMT
நாட்டறம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபி (வயது 21). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் இருந்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தாயார் சின்ன பாப்பா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறனர்.
Tags:    

Similar News