செய்திகள்
தற்கொலை

கோவையில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2021-11-18 09:52 GMT   |   Update On 2021-11-18 09:52 GMT
கோவையில் காதலி பேசாததால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

நாமக்கல் மாவட்டம் சேரமங்கலம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த் (19). இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரசாந்த் அவரது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வந்த பிரசாந்த் பகுதிநேரமாக தனது சொந்த ஊரில் வேலை செய்துகொண்டு வந்தார். மேலும் தான் காதலித்து வந்த பெண்ணை படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கடந்த மாதம் முதல் கல்லூரி திறந்ததால் கோவைக்கு வந்து அறையில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் திருமணத்திற்காக சேலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் கோவை திரும்பினார். இந்த நிலையில் பிரசாந்தின் காதலி அவரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த பிரசாந்த் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News