செய்திகள்
கைது

ஆய்குடி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2021-11-17 10:46 GMT   |   Update On 2021-11-17 10:46 GMT
ஆய்குடி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி:

சுரண்டையை அடுத்த ஆய்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரகட்டில் வசித்து வரும் பத்துரோஸ் திரவியம் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த அல்ஹாஜன் (32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கனி (50) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்த 3 பேரும் தென்காசி பகுதியில் 2 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News